Wednesday, 15 November 2017

மூன்றாம் உலகப்போர் - 3rd world war

இதுவரை நடந்த உலக மகா யுத்தங்களிலேயே மிகவும் மோசமான யுத்தம் எது என்று தெரியுமா..? – இனி ‘நடக்கப்போகும்’ போகும் உலக யுத்தம் தான்.ஆம். அடுத்த உலக யுத்தம் தாயராகி கொண்டிருக்கிறது.
சந்தேகமே இன்றி – நீயா நானா போட்டி போடும் நாடுகளான – சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தான் அடுத்து வரும் உலக யுத்தததிற்கு முழு பொறுப்பும் ஏற்க போகின்றன.
வானத்தில் :
நாம் நினைப்பது போல அடுத்த உலக யுத்தமானது நிலத்தில் நடக்க போவது இல்லை – வானத்தில் நடக்கப் போகிறது.
சூப்பர் பவர் :
உலகின் மூன்று சூப்பர் பவர் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவைகள், சக்தி வாய்ந்த அண்டவெளி அணு ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிகாரப்பூர்வமாக பரிசோதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
இராணுவ பலம் :
இது போன்ற பரிசோதனைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் இராணுவ பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனம்..!
உலக போர் :
மிக பெரிய நாடுகளின் இராணுவ பலம் எதற்காக அதிகரிக்கப்படுகிறது..? அது எதில் சென்று முடியும்..? – என்பதற்கு, இதற்கு முன் நடந்த உலக போர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தொழிநுட்பம் :
இதற்கு ஆதாரமாய் பிரபல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கையான ‘பாப்புலர் சயின்ஸ்’ (Popular Science) – அடுத்த பனிப்போர் ஆனது திறந்தவெளி அண்டத்தில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ச்சி :
மாட்டு வண்டிகளில் கூட ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கு நாம் வந்து விட்டோம். மொபைல் போன் டவர்கள் தொடங்கி ஏடிஎம் (ATM) வரை அனைத்து கட்டுபாடுகளும் செயற்கைகோள்கள் மூலம் தான் நடக்கின்றன.
செயற்கை கோள் :
ஆகையால் இது போன்ற கட்டுப்பாட்டு செயற்கை கோள்களை மனதில் கொண்டு, சூப்பர் பவர் நாடுகள் ஒன்றை ஒன்று வீழ்த்தவும், தேசிய அளவிலான பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன..!
தாக்குதல் :
அது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்தில் அண்டத்தில் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.
பாதுகாப்பு :
ஏனெனில், சூப்பர் பவர் நாடுகள் சிட்டிங் டக்குகள் (Sitting Ducks) கிடையாது அதாவது, தாக்குதலில் இருந்து தப்பிக்க எந்த விதமான பாதுகாப்பும் செய்து கொள்ளாத நிலையில் இல்லை என்று அர்த்தம்.
சீனா :
இது சீனாவின் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள் ஆகும்.
குறி :
பிரபல ‘ராய்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனமானது, “பூமியின் மேற் பரப்பானது ,படை கலங்களால் நிரப்பபட்டுள்ளது, யுத்ததிற்காக குறியாக உள்ளது..!” என்று குறிப்பிட்டுள்ளது.
செயற்கைகோள் :
அதாவது சுமார் 1200 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக சுற்றி கொண்டிருக்கின்றன.
தொடர்பு :
அதாவது கப்பல் மற்றும் விமானங்களை செலுத்துவதற்காகவும், தொடர்பு சார்ந்த காரணகளுக்காகவும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் சுற்றி கொண்டிருக்கின்றன.
கண்காணிப்பு :
மேல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமின்றி செயற்கை கோள்கள், வான் கோள்களுக்குரிய கண்காணிப்பு (planetary surveillance) கருதியும் உலவ விடப்படுகிறதாம்.
முன்னிலை :
செயற்கை கோள்களின் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா மற்றும் ரஷ்யா, அமெரிக்க செயற்கைகோள்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தத்தம் செயற்கை கோள்களை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றதாம்.
வாய்ப்பு :
நிலத்தை போல் அல்லாது, எந்த நாட்டு செயற்கைகோளாக இருந்தாலும் சரி, பலம் மற்றும் பிழைத்திருக்கும் வாய்ப்பு ஆகையவைகள் சமமாக உண்டு.
அண்டவெளி யுத்தம் :
அதன் அடிப்படையில் காணும் போது அண்டவெளி யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற வெளிகளில் ‘போர் சாத்தியங்கள்’ உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலை :
அமெரிக்கா மட்டுமே மொத்தம் 500 செயற்கை கோள்களை நிலைநிறுத்தி இருக்கிறது.
இராணுவம் :
அதில் 100 செயற்கை கோள்கள் அமெரிக்க இராணுவம் சார்ந்த வேலைகளுக்காக இயங்குகிறதாம்.
விண்ணில் செலுத்தி :
மறுபக்கம் சீனா கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 130 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.
உளவு :
அந்த 130 செயற்கை கோள்களில் உளவு பார்க்கும் செயற்கை கோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து.
சோதனை விண்கலம் :
உளவு செயற்கை கோள்களில் சிக்கி கொள்ளாதபடி வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் சோதனை விண்கலம் இது.
விண்வெளி நிலையம் :
சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை 2022 ஆம் ஆண்டில் நிறுவ இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் :
செயற்கை கோள்களுக்கு எதிரான ஆயுதம் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் கலைஞர் ஒருவரால் வரையப்பட்டது இது.
விளக்கப்படம் :
இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் மிதக்கும் தேவை இல்லாத விண்கல மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் சார்ந்த ‘கிராபிக்’ விளக்கப்படம்.
ஏவுகனைகள் :
விண்வெளிக்குள் 6000 மைல்கள் வரை கடந்து செல்லும் வகையிலான ஏவுகனைகள் சூப்பர் பவர் நாடுகளால் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது.
மூன்று நாடுகளும் :
வெளிப்படையாகவே அறிக்கைகளையும், தாக்குதல் சார்ந்த விடயங்களை தெரிவிக்கும், இந்த மூன்று நாடுகளும், எதற்கும் எப்போதிலிருந்தோ தயார் நிலையில் தான் இருக்கின்றன மேலும் வலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

No comments:

Post a Comment

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது  இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...